நீலகிரியில் மினி பஸ் உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக போக்குவரத்துத் தறை எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த நீலகிரி மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஸ்டிரைக்கைக் கைவிட்டுள்ளனர்.
குன்னூரில் அதிக அளவில் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் ரெய்டு நடத்தி நான்கு மினி பஸ்களைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மினி பஸ் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, மினி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டு போக்குவரத்து சகஜமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications