ஐபிஎல் கொச்சி தனது தளத்தை அகமதபாத்துக்கு மாற்ற விரும்பியது – பவார் புதுத் தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏற்கனவே உரிமையாளர்கள் விவரம் தொடர்பாக பெரும் புயலைக் கிளப்பியுள்ள ஐபிஎல் கொச்சி அணி விவகாரத்தில், மத்திய அமைச்சர் சரத் பவார் புதிய கோணத்தை சேர்த்துள்ளார். ஐபிஎல் கொச்சி அணியை அகமதாபாத்துக்கு மாற்ற உதவுமாறு கோரி தன்னை சிலர் அணுகியதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரான பவார் இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொச்சி அணியை ஏலத்தில் எடுத்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் என்னை அணுகி அகமதாபாத்துக்கு அதை மாற்ற உதவுமாறு கோரினர். நான்கு பேர் இவ்வாறு என்னை அணுகிக் கோரினர். அவர்கள் யார் என்ற விவரத்தைத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் பவார்.
இப்படி ஐபிஎல் கொச்சியை மையமாக வைத்து புதுப் புதுப் புயல்கள் கிளம்பி வருவதால் இந்த விவகாரத்தில் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது..












Click it and Unblock the Notifications