ஐபிஎல் போட்டிகள்- கிரிக்கெட்டே அல்ல: விளையாட்டு அமைச்சர்
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டே அல்ல என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் கூறினார்.
ஐபிஎல் கொச்சி கிரிக்கெட் அணி குறித்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து நானும் கேள்விப்பட்டேன். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் (ஐபிஎல்) கிரிக்கெட் விளையாட்டே அல்ல என்பதுதான் எனது கருத்து.
வணிக நோக்கிற்காக விதிகளை வணிகரீதியில் மாற்றி கிரிக்கெட் மைதானத்திற்குள் மதுபான பாட்டில்கள் கொண்டு வரும் அளவுக்கு நிலைமையை கொண்டு வந்துவிட்டனர். இதை இந்திய கிரி்க்கெட் வாரியம் வேடிக்கை பார்க்கிறது.
மேலும் மங்கூஸ் பேட்களை அனுமதித்தும், பவுன்ட்ரி எல்லைகளை சுருக்கியும் ஐபிஎல் போட்டிகளில் பவுலர்களை விட பேட்ஸ்மேன்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து விளையாட்டையே கெடுத்து வருகின்றனர்.
அணிகளை வாங்குபவர்கள் இந்த விளையாட்டை மேம்படுத்துவதற்காக எல்லாம் வாங்கவில்லை. பணம் கொடுத்து வாங்குகிறார்கள்.. அதை வைத்து சம்பாதிக்க எல்லை குறுக்கு வழிகளிலும் ஈடுபடுகிறார்கள்.
இதில் அணியை வாங்கியவர்களின் விவரத்தை வேறு மறைக்க வேண்டும் என்று ரூல் பேசுகிறார்கள். எல்லா ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் விவரத்தையும் வெளியிட வேண்டியது மிக மிக அவசியம் என்றார்.












Click it and Unblock the Notifications