சத்துணவில் முட்டை வழங்குவது ஏன்?-கருணாநிதி
சென்னை: சட்டசபையில் இன்று உணவுத்துறை அமைச்சர் வேலு பேசுகையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சத்துணவில் சத்து இல்லை என்பதால் முதல்வர் கருணாநிதி முட்டை வழங்கினார் என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி கூறுகையி்ல்,
உணவுத்துறை துறை அமைச்சர் பேசும்போது, அப்போது போட்ட சத்துணவில் சத்து இல்லை என்று குறிப்பிட்டார். அதில் ஒரு திருத்தம். அந்த சத்து போதாது என்பதற்காகத்தான் முட்டை வழங்கப்பட்டதே தவிர சத்து இல்லை என்பதற்காக அல்ல என்றார்.
இதையடுத்து அதிமுகவினர் அமைதியாயினர்.
மானியக் கோரிக்கை பற்றி மட்டும் பேசுங்கள்:
பின்னர் பள்ளிக் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ மாலை ராஜா பேசும்போது, தனது தொகுதியில் உள்ள குறைகளைப் பற்றியும் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர், பள்ளிக் கல்வித்துறை மானியத்திலே பாலம் எங்கிருந்து வந்தது?. ஆறு எங்கே இருந்தது என்பதை எல்லாம் நமது உறுப்பினர்கள் எண்ணிப் பார்த்து பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாம் பேசுகின்ற மானியத்தின் தலைப்புக்கும், பேச்சுக்கும் தொடர்பு இருந்தால்தான் நம்மை நல்ல “பார்லிமெண்டரியன்" என்று மக்கள் மதிப்பார்கள்.
அதைக் கற்று தெளிந்து அவ்வாறு ஒழுகிட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். இது எல்லா உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications