குமுதம் தலைமை நிருபர் மீது குமுதம் சினேகிதி பெண் ஆசிரியர் செக்ஸ் புகார்!
சென்னை: தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக குமுதம் தலைமை நிருபர் திருவேங்கிமலை சரவணன் மீது, அதே குழுமத்தைச் சேர்ந்த சிநேகிதி இதழின் பொறுப்பாசிரியர் லோகநாயகி புகார் தெரிவித்துள்ளார்.
குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் நடத்தும் பெண்கள் பத்திரிகையான சிநேகிதியின் பொறுப்பாசிரியராக இருப்பவர் லோகநாயகி. இதற்கு முன்பும் பல நிறுவனங்களில் பணியாற்றியவர்.
இவர் நேற்று மாலை சென்னை மாநகராட்டி காவல் ஆணையர் ராஜேந்திரனைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். பின்னர் நிருபர்களை அழைத்து அவர் கூறியதாவது:
குமுதம் பப்ளிகேஷன்ஸ் நடத்தும் வார இதழான குமுதம் பத்திரிகையின் தலைமை நிருபராக பணியாற்றும் திருவேங்கிமலை சரவணன் என்னையும், என்னோடு பணிபுரியும் இதர பெண் நிருபர்களையும், உதவி பெண் ஆசிரியர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தினமும் செக்ஸ் தொல்லை கொடுக்கிறார். திருமணமாகாத பெண்களையும் கேலியும் கிண்டலும் செய்கிறார்.
இது பற்றிக் கேட்டால், உங்களை அசிங்கப்படுத்தி, அவதூறுகளை பரப்பி, வேலையை விட்டே தூக்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து, திருவேங்கிமலை சரவணன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளேன். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்..." என்றார்.
இந்த பிரச்சனை தொடர்பாக பத்திரிகை நிர்வாகமும் விசாரணை நடத்தி சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications