அனைத்து ஐபிஎல் அணிகளின் நிதி விவகாரங்களையும் ஆராய வருமான வரித்துறை முடிவு
டெல்லி: ஐபிஎல் கொச்சி அணியின் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள பெரும் சர்ச்சையைத் தொடர்ந்து ஐபிஎல் அமைப்பில் உள்ள 10 அணிகளின் நிதி விவகாரங்களையும் முழுமையாக ஆராய வருமான வரித்துறை முடிவு செய்தள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம்தான். இதன் மூலம் உருவான அமைப்புதான் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் ஆகும். முன்பு இந்த அமைப்பில 8 அணிகள் இருந்தன.
சமீபத்தில் புதிதாக இரண்டு ஐபிஎல் அணிகள் இணைக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் ஐபிஎல் கொச்சி. இதுதான் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஐபிஎல் கொச்சி அணியை வாங்கியது மும்பையைச் சேர்ந்த கெய்க்வாட் சகோதரர்களுக்குச் சொந்தமான ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். ஆனால் தனது காதலியான சுனந்தாவுக்காக மத்திய வெளியுறவு இணை அமைச்சர் தரூரே மறைமுகமாக களத்தில் இறங்கி அணியை வாங்க உதவினார் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.
மேலும், கொச்சி அணியின் பங்குதாரர்கள் குறித்தும் சர்ச்சை எழுந்தது – லலித் மோடி வெளியிட்ட ட்விட்டர் செய்தியால்.
மேலும், ரெண்டஸ்வஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான கெய்க்வாட் சகோதரர்கள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கொச்சி அணி விவகாரத்தை ஆராய வருமான வரித்துறை முடிவு செய்தது.
இதையடுத்து சமீபத்தில் மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமையகம், மோடியின் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. தற்போது மொத்தம் உள்ள 10 அணிகளையும் அலசி ஆராய வருமான வரித்துறை முடிவுக்கு வந்துள்ளதாம்.
மோடியைத் தொடர்ந்து 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோரை விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இவர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது, அதை எப்படிப் பகிர்ந்து கொள்கிறார்கள், எப்படி முதலீடு செய்கிறார்கள் என்பது உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை விசாரிக்கவுள்ளதாம்.
இதுதொடர்பான விசாரணை ஏற்கனவே தொடங்கி விட்டதாக தெரிகிறது. மேலும் மும்பையில தனியாக ஒரு பிரிவையும் வருமான வரித்துறை தொடங்கியுள்ளதாம். இன்னும் 2 மாதத்திற்குள் இந்த விசாரணையை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
ஐபிஎல்லை ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாக வருமான வரித்துறை அங்கீகரிக்கவில்லை. இதனால் தற்போதைய விசாரணைகள் அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம்தான் உள்ளது.
ஐபிஎல் அமைப்பு தொடங்கப்பட்டபோதே மோடிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி கணக்குகளைத் தாக்கல் செய்யமாறு கூறியிருந்த்து. ஆனால் அதைத் தூக்கி கிடப்பில் போட்டு விட்டார் மோடி. தற்போது அவர் வசமாக சிக்கியிருப்பதாக தெரிகிறது.
எனவே கொச்சி விவகாரத்தை வைத்து ஒட்டுமொத்த ஐபிஎல் நிர்வாகத்தின் நிதி கட்டமைப்புகளை ஆராய வருமான வரித்துறை தீர்மானித்துள்ளதாம்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications