மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்த தலிபான்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மும்பையில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் சிலருக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்தில் தலிபான்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தை தலிபான், லஷ்கர் இ தொய்பா, ஐஎஸ்ஐ ஆகியவை இணைந்து நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி தரப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா இதுவரை அளித்துள்ள பல்வேறு ஆவணங்களில் ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பிடியில் சிக்கியுள்ள ஹெட்லி மூலம் இந்தத் தகவல் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications