பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சை: தமிழக அரசு பரிந்துரைக்க ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: பிரபாகரனின் தாயார் சென்னையில் சிகிச்சை பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் தனது கணவர் காலமான செய்தியைக் கூட தெரிந்துகொள்ள முடியாத நிலையில் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்.
பார்வதி அம்மையார் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்தார் என்றும், அவரை சென்னை விமான நிலையத்தில் இறங்கவிடாமல், தடுத்து விமானத்திலேயே பல மணி நேரம் உட்காரவைத்து, பின்னர் அதே விமானத்தில் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
சென்னை நகரில் மிக நவீன மருத்துவ சிகிச்சை கிடைப்பதால்தான் 80 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அந்த அம்மையார், இங்கே சிகிச்சை பெற வந்திருக்கிறார்.
இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியினை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அவருக்கு வழங்கியிருக்கிறது. இந்திய தூதரகம் அனுமதி வழங்கியிருக்கிறது என்றால், இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்றுதான் பொருள்.
அப்படியிருந்தும், சென்னை நகரில் அவரை இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு காரணமானவர்கள் யார்?
நிச்சயமாக தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதனை செய்திருக்கமாட்டார்கள். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை.
மேலும், முன்பு ஒருமுறை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆலோசகர் பாலசிங்கம் மற்றும் சந்திரகாசன் ஆகியோரை சென்னையில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டபோது, அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கி தடுத்து நிறுத்தியவர் கருணாநிதி.
எனவே, அவரது அரசு இதனை செய்திருக்காது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் தான் இச்செயலை செய்திருக்கக்கூடும்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள்தான். அவர்களது அனுமதியின்றி வெளிநாட்டவர் எவரும் இந்தியாவுக்குள் நுழைய முடியாது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டார்கள்.
மத்திய அரசின் அனுமதி இல்லாமல், அவர்கள் கட்டளையிடாமல் இங்குள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் செயல்பட்டிருக்க முடியாது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்பதில் சந்தேகமில்லை. உலகில் எந்தவொரு நாட்டிலும் இது போன்ற மனிதநேயமற்ற செயல் நடந்ததாக வரலாறு இல்லை.
எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சை பெற அனுமதிப்பது தான் உலக நாடுகள் கடைப்பிடித்து வரும் நடைமுறை.
நமது பகை நாடுகளை சேர்ந்தவர்களும், நமக்கு எதிரான நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கே வந்து, சிகிச்சை பெற்று செல்வதற்கு அனுமதி வழங்கி வரும் நிலையில், இங்குள்ள ஆறரை கோடி தமிழர்களை நம்பி சிகிச்சை பெற வந்த பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே, சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள பார்வதி அம்மையார், மீண்டும் சென்னைக்கு வந்து தேவையான மருத்துவச் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இந்த அனுமதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications