For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெரீனா கடற்கரையில் படகுகளுக்கு மத்தியில் பதுங்கியிருந்த இலங்கையர் கைது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நகரில் நேற்று இரவு போலீஸார் விடிய விடிய நடத்திய சோதனையில் 400 பேர் கைதாகினர். இவர்களில் ஒருவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில நேற்று இரவு போலீஸார் திடீர் வேட்டையில் இறங்கினர். நகர் முழுவதும் நடந்த தீவிர சோதனை மற்றும் தேடுதல் வேட்டைகளில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இவர்களில் ஒருவர் மெரீனா கடற்கரையில் வைத்து பிடிபட்டார்.

இவரது பெயர் முகம்மது அன்சாரி. இலங்கையைச் சேர்ந்தவர். மெரீனா கடற்கரையில் படகுகளுக்கு மத்தியில் இவர் பதுங்கியிருந்தார். அவரைப் பிடித்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சுற்றுலாவாக தமிழ்நாடு வந்த்தாகவும், அப்போது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டதாகவும் அன்சாரி கூறினார். ஆனால் அவரது பேச்சு குழப்பமாக இருப்பதால் அவரை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X