மெரீனா கடற்கரையில் படகுகளுக்கு மத்தியில் பதுங்கியிருந்த இலங்கையர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரில் நேற்று இரவு போலீஸார் விடிய விடிய நடத்திய சோதனையில் 400 பேர் கைதாகினர். இவர்களில் ஒருவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில நேற்று இரவு போலீஸார் திடீர் வேட்டையில் இறங்கினர். நகர் முழுவதும் நடந்த தீவிர சோதனை மற்றும் தேடுதல் வேட்டைகளில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இவர்களில் ஒருவர் மெரீனா கடற்கரையில் வைத்து பிடிபட்டார்.

இவரது பெயர் முகம்மது அன்சாரி. இலங்கையைச் சேர்ந்தவர். மெரீனா கடற்கரையில் படகுகளுக்கு மத்தியில் இவர் பதுங்கியிருந்தார். அவரைப் பிடித்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சுற்றுலாவாக தமிழ்நாடு வந்த்தாகவும், அப்போது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டதாகவும் அன்சாரி கூறினார். ஆனால் அவரது பேச்சு குழப்பமாக இருப்பதால் அவரை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+