பாரத் பந்த் – சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரைக்கு மட்டும் விதி விலக்கு
Subscribe to Oneindia Tamil
மதுரை: நாடு முழுவதும் வருகிற 27ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்தும் பாரத் பந்த், மதுரையில் மட்டும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் மதுரைக்கு மட்டும் பந்த்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரிகள், அதிமுக, வட மாநில எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவை இணைந்து விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து வருகிற 27ம் தேதி பாரத் பந்த் நடத்துகின்றன.
இந்த நிலையில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடந்து வருவதால் மதுரைக்கு மட்டும் பந்த்திலிருந்து விதி விலக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையில் இன்று நடந்த அதிமுக, மதிமுக, இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications