ரூ. 8 லட்சம் மோசடி – பஞ்சாயத்துத் தலைவி உள்பட 3 பேர் கைது
அம்பாசமுத்திரம்: ரூ. 8 லட்சம் முறைகேடு புகாரில் சிக்கிய வெள்ளங்குளி பஞ்சாயத்துத் தலைவி மற்றும் துணை தலைவர் உள்பட 4 பேர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பை ஊராட்சி ஓன்றியத்தில் உள்ளது வெள்ளங்குழி பஞ்சாயத்து. இதன் தலைவராக காந்திமதி, துணை தலைவராக வெங்கடாஜலபதி உள்ளனர்.
இந்த பஞ்சாயத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது தலைமையில் அதிகாரிகள் சங்கரசுப்பிரமணியன், கோமதி, வேல்சாமி, முத்துகுமார் ஆகியோர் கடந்த மாதம் பஞ் அலுவலத்தை ஆய்வு செய்தனர்.
18 மணி நேரம் கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் ஊரக வேலை திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊரக உட்கட்டமைப்பு திட்டம், மற்றும் பஞ்சாயத்து அடிப்படை திட்டங்கள், செக் மோசடி, வரி விதிப்பு மோசடி, செலவினங்களில் முறைகேட்டால் இழப்பு ஆகியவற்றின் மூலம் ரூ.8 லட்சத்து 24 ஆயிரம் ஊழல் நடைபெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையறிந்த பஞ் தலைவி காந்திமதி, துணை தலைவர், ஊழியர் கமலக்கண்ணன் ஆகியோர் தலைமறைவானார்கள்.
இதற்கிடையே பஞ் தலைவர் காந்திமதி மார்ச் 10ம் தேதி 1 லட்சத்து 6 ஆயிரம், எழுத்தர் கமலக்கண்ணன் மார்ச் 8ம் தேதி 3 லட்சத்து 43 ஆயிரத்து 330ஐ அம்பையில் உள்ள ஒரு வங்கியில் திருப்பி செலுத்தினர். இதன் மூலம் அவர்கள் தில்லுமுல்லி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. மோசடி வெளியானதை தொடர்ந்து பஞ்சாயத்துத் தலைவி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர், மற்றும் துணை தலைவர், ஊழியர் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்பி ஆஸ்ரா கர்க்கிடம் மனு கொடுத்தனர். அதன்படி எஸ்பி அவர்கள் 4 பேரையும் கைது செய்யும் படி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வெள்ளாங்குளி கிராமத்துக்கு சென்று மோசடி புகாரில் சிக்கிய பஞ்சாயத்துத் தலைவி, அவரது கணவர் மற்றும் துணை தலைவர், ஊழியர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
--
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications