சரத்பவாருக்கு விவசாயிகள் பண மாலை அணிவிக்க வேண்டும்: பால் தாக்கரே
மும்பை: ஐபிஎல் போட்டிகளில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு லலித் மோடியும், மத்திய அமைச்சர் சரத் பவாரும்தான் காரணம் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள கட்டுரையில்,
சரத்பவாருடைய விசுவாசியான லலித் மோடி ஒரு பெரும் ஊழல் பேர்வழி. கிரிக்கெட்டை சூதாட்டமாக்கிய ஆசாமி.
பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டுகள் வெடித்த பிறகும் தொடர்ந்து அங்கு போட்டியை நடத்தியதற்கு லலித் மோடிக்கு 'பாராட்டு விழா' நடத்த வேண்டும்.
மகாராஷ்டிராவில் வறுமை, வறட்சி காரணமாக மீண்டும் பல விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதற்காக சரத் பவாருக்கு விவசாயிகள் பணமாலை அணிவித்து 'பாராட்ட' வேண்டும்.
விவசாயத் துறையை கவனித்து வரும் மத்திய அமைச்சர் ஒருவர் கிரிக்கெட்டில் இப்படி கவனம் செலுத்தினால் விவசாயிகள் தற்கொலைகளை எப்படித் தவிர்க்க முடியும் என்று கேட்டுள்ளார் தாக்கரே.












Click it and Unblock the Notifications