ஓகேனக்கல் குடிநீர் திட்டம்: தமிழகம் மீது சட்டரீதியான நடவடிக்கை-கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

Hogenakkal
பெங்களூர்: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட விவகாரத்தில் மத்திய அரசிடம் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு நடந்து கொள்ளவில்லை என்றும் இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்தித்து முறையிடுவேன் என்றும் இந்த பிரச்சனையில் தமிழகத்துக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதற்காக ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.

ஜப்பான் வங்கி நிதி உதவியுடன் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி காவிரி ஆற்றில் இருந்து இந்த இரு மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது.

ஆனால் திட்டம் செயல்படுத்தப்படும் ஓகேனக்கல் பகுதி தனது எல்லையில் இருப்பதாகக் கூறி இந்த திட்டத்துக்கு கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

மேலும் இந்த இடம் சர்ச்சைக்குரிய பகுதி என்றும் இங்கு நிலம் அளவை சர்வே நடத்திய பிறகே தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கர்நாடக கூறி வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிருபர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை,

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை, சமீபத்தில் தமிழக அரசு மாற்றியமைத்து செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பழைய திட்டப்படி தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்தவில்லை.

முதலில் தீட்டப்பட்ட திட்டத்தின்படி காவிரி ஆற்றிலிருந்து 1.7 டிஎம்சி தண்ணீரைப் பெற்று 30 லட்சம் மக்களுக்கு வினியோகிக்கவே தமிழகம் முடிவு செய்திருந்தது. ஆனால் இப்போது கூடுதலாக 15 லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் இருந்து 2.4 டிஎம்சி நீரைப் பெறும் வகையில் தமிழக அரசு திட்டத்தை சமீபத்தில் மாற்றியமைத்துள்ளது.

இவ்வாறு திட்டத்தை மாற்றியமைப்பது சரியல்ல. பழைய வரையரைப்படியே திட்டத்தை செயல்படுத்துவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் சொன்னபடி தமிழகம் நடந்து கொள்ளவில்லை.

மேலும், காவிரி ஆற்றிலிருந்து தண்ணீரை எடுத்து பெண்ணாறுக்கு மாற்றி திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து இதுவரை இரு மாநில அரசுகளும் பேசவில்லை. இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை டெல்லியில் இன்று சந்தித்து முறையிட உள்ளேன்.
அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் பழைய திட்ட வரையரைப்படியே ஓகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தவிட வேண்டும் என்றும் வலியுறுத்துவேன்.

அதைத் தொடந்து இந்த திட்டம் குறித்து கர்நாடக சட்ட வல்லுநர்களுடனும் விவாதிக்க உள்ளேன். இந்த விவகாரத்தில் தமிழகம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+