ஓகேனக்கல் குடிநீர் திட்டம்: தமிழகம் மீது சட்டரீதியான நடவடிக்கை-கர்நாடகம்

தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதற்காக ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.
ஜப்பான் வங்கி நிதி உதவியுடன் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி காவிரி ஆற்றில் இருந்து இந்த இரு மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது.
ஆனால் திட்டம் செயல்படுத்தப்படும் ஓகேனக்கல் பகுதி தனது எல்லையில் இருப்பதாகக் கூறி இந்த திட்டத்துக்கு கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
மேலும் இந்த இடம் சர்ச்சைக்குரிய பகுதி என்றும் இங்கு நிலம் அளவை சர்வே நடத்திய பிறகே தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கர்நாடக கூறி வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிருபர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை,
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை, சமீபத்தில் தமிழக அரசு மாற்றியமைத்து செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பழைய திட்டப்படி தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்தவில்லை.
முதலில் தீட்டப்பட்ட திட்டத்தின்படி காவிரி ஆற்றிலிருந்து 1.7 டிஎம்சி தண்ணீரைப் பெற்று 30 லட்சம் மக்களுக்கு வினியோகிக்கவே தமிழகம் முடிவு செய்திருந்தது. ஆனால் இப்போது கூடுதலாக 15 லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் இருந்து 2.4 டிஎம்சி நீரைப் பெறும் வகையில் தமிழக அரசு திட்டத்தை சமீபத்தில் மாற்றியமைத்துள்ளது.
இவ்வாறு திட்டத்தை மாற்றியமைப்பது சரியல்ல. பழைய வரையரைப்படியே திட்டத்தை செயல்படுத்துவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் சொன்னபடி தமிழகம் நடந்து கொள்ளவில்லை.
மேலும், காவிரி ஆற்றிலிருந்து தண்ணீரை எடுத்து பெண்ணாறுக்கு மாற்றி திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து இதுவரை இரு மாநில அரசுகளும் பேசவில்லை. இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை டெல்லியில் இன்று சந்தித்து முறையிட உள்ளேன்.
அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் பழைய திட்ட வரையரைப்படியே ஓகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தவிட வேண்டும் என்றும் வலியுறுத்துவேன்.
அதைத் தொடந்து இந்த திட்டம் குறித்து கர்நாடக சட்ட வல்லுநர்களுடனும் விவாதிக்க உள்ளேன். இந்த விவகாரத்தில் தமிழகம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications