ராஜபக்சே புண்ணியத்தால் மீண்டும் எம்.பி பதவியைப் பெற்றார் கருணா
கொழும்பு: ராஜபக்சேவின் கருணையால் மீண்டும் எம்.பி. பதவியைப் பெற்றுள்ளார் கருணா.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் தேசியப் பட்டியலின் கீழ் பிரதிநிதித்துவ எம்.பிக்களைத் தேர்வு செய்ய முடியும்.
அந்தப் பட்டியலில் தற்போது கருணாவுக்குப் பதவி கிடைத்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பட்டியலில் கருணா தவிர முன்னாள் பிரதமர் ரத்னசிறீ விக்ரமநாயகே, பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயரத்னே, டல்லஸ் அழகப்பெரும, ஜி.எல்.பெரீஸ், நடிகை மாலினி பொன்சேகா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 3 தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் தமிழர்களான டிஎம்.சுவாமிநாதன், யோகராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சுமேந்திரன் இடம் பெற்றுள்ளார்.
பொன்சேகா கட்சி சார்பில் 2 பேருக்கு எம்.பி. பதவி கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications