லஞ்சம் – இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் அதிரடி கைது
டெல்லி: பஞ்சாபில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதர்கு ரூ. 2 கோடி லஞ்சப் பணத்தை வாங்கிய இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
நேற்று இரவு தேசாயின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். பஞ்சாபில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தருவது தொடர்பாக தேசாயும் அவரது உதவியாளர் ஜிதேந்தர் பால் சிங் என்பவரும் ரூ. 2 கோடி பேரம் பேசி வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த ரெய்டை நடத்தியது சிபிஐ.
சிபிஐ ரெய்டுக்குப் போனபோது தேசாயும், ஜிதேந்தர் பால் சிங்கும், லஞ்சப் பணத்தைக் கொடுத்த பஞ்சாப் கியான் சாகர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கன்வல்ஜித் சிங் ஆகியோர் லஞ்சப் பணத்துடன் இருந்தனர். அவர்களை கையும் களவுமாக அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 6 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications