சிங்கப்பூர் வங்கியில் ரூ.92 கோடி பதுக்கிய மோசடி நிறுவனம்
திருப்பூரில் பொதுமக்களின் பல கோடியை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பார்த்தி என்ற நிறுவனம் ரூ 92 கோடியை சிங்கப்பூர் வங்கி ஒன்றில் பதுக்கியுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன்ராஜ், இயக்குனர்கள் கதிரவன், கமலவள்ளி ஆகியோரைக் கைது செய்தனர்.
ஆனால் இவர்களுக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இதனை ரத்து செய்யக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி கே.என். பாஷா முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சார்பில் சிங்கப்பூரில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.92 கோடி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அந்தப் பணத்தை எப்படி மீட்டு வந்து பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கப் போகிறீர்கள் என்ற விவரத்தை வரும் திங்கட்கிழமைக்குள் நீதிமன்றத்தில் விவரமாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications