லலித் மோடி பதவி விலக வேண்டும்- சரத் பவார் உத்தரவு

முன்னதாக நேற்று கிரிக்கெட் வாரியத்திற்கு மோடி அனுப்பிய தகவலில், ஐந்து வருடங்கள் பணியாற்றி விட்டேன். எனக்கு ஐந்து நாள் அவகாசம் தாருங்கள். உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறேன் என்று கூறியிருந்தார் மோடி.
மேலும் திங்கள்கிழமை கூட்டப்பட்டுள்ள ஆட்சிமன்றக் குழுவை கூட்டும் உத்தரவை கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கருத்து தெரிவித்த்தையும் தற்போது கைவிட்டு விட்டாராம் மோடி.
இந்த நிலையில் மோடியின் கோரிக்கை குறித்து இன்று மும்பையில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூடி ஆலோசனை செய்தனர். இதில் மோடிக்கு அவகாசம் தருவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். மோடி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என்ற முடிவுக்கு வாரியம் வந்துள்ளது.
இந்த நிலையில் மோடி உடனடியாக பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சரத் பவார் கூறியுள்ளார்.
இதை மோடியிடமும் பவார் கூறி விட்டாராம். மோடி விவகாரத்தில் பவாருக்கும், பிரபுல் படேலுக்கும் பெரும் சிக்கலாகி விட்டது. நாடாளுமன்றத்தில் இவர்களின் தலையைக் குறி வைத்து எதிர்க்கட்சிகள் கச்சை கட்டி கிளம்பியுள்ளன. எதிர்க்கட்சிகளின் இறுக்கம் அதிகரித்தால் இருவரது பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படுவது உறுதி. இதனால்தான் பதவி விலகுமாறு மோடியிடம் கண்டிப்பாக கூறியுள்ளாராம் பவார்.
பவாரின் அட்வைஸை மோடி ஏற்பார் என்று தெரிகிறது. மேலும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடரும் யோசனையையும் மோடி கைவிட்டு விட்டதாக தெரிகிறது.
தற்போதைய நிலையில் மோடி விலகாவிட்டால், நாளை மறு நாள் கூடும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் அவரை நீக்கும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications