பிரேஸில்; 1 லட்சம் கரோலா கார்களை திரும்பப் பெறும் டொயோட்டா!
அந்த அளவு வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் குவிகின்றன. இதன் எதிரொலியாக பிரேசில் நாட்டில் ஓடும் 1 லட்சம் டொயோட்டா கரோலா கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
பிரேஸிலின் மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் கரோலா கார்கள் விற்பனை முற்றாகத் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேக வேகமாக இந்த திரும்பப் பெறும் அறிவிப்பை டொயோட்டா வெளியிட்டுள்ளது.
கரோலா கார்களின் அக்ஸலரேட்டர் பெடல்கள் பிரச்சினையாக இருப்பதாலும், காரின் அடிப்பாக விரிப்பில் இந்த பெடல்கள் அடிக்கடி மாட்டிக் கொள்வதாலும் மோசமான விபத்துக்கள் நேர்வதாக புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் கரோலா கார்களை விற்கக் கூடாது என்று உத்தரவிட்டது அந்த மாநில நிர்வாகம்.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த டொயோட்டா நிர்வாகம், பிரேஸிலிலும் தனது திரும்பப் பெறல் அறிவிப்பை வெளியிட ஆரம்பித்தது.
முதல் கட்டமாக 100000 கரோலா கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களைத் திரும்பப் பெற்றுள்ளது டொயோட்டா. பாதுகாப்பில்லாத கார்களைத் தயாரித்த குற்றத்துக்காக கிட்டத்தட்ட ரூ 75 ஆயிரம் கோடி வரை அபராதம் செலுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளது டொயோட்டா நிர்வாகம்.