For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்- மதுரையில் கோலாகலம்

Google Oneindia Tamil News

Meenakshi Amman Sundareswarar Thirukalyanam
மதுரை: மதுரையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தேறியது.

மதுரையில் சித்திரைத் திருவிழா களை கட்டியுள்ளது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அம்மனையும, சுந்தரேஸ்வரப் பெருமானையும் கண்டு வணங்கி அருள் பெற்றனர். பெண்கள் புதுத் தாலிக் கயிறு மாற்றிக் கொண்டனர்.

பவளக்கனிவாய் பெருமாள், சுப்பிரமணியசுவாமி, தெய்வானை சகிதம் தாரை வார்த்துக் கொடுக்க மீனாட்சி அம்மன் வேடம் பூண்டிருந்த புரோகிதரும், சுந்தரேஸ்வரராக இருந்த புரோகிதரும் மாங்கல்யத்தை அம்மன் கழுத்தில் அணிவித்தனர்.

இன்று இரவு இரவு மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X