கோடீஸ்வரர்களுக்கு ஆடம்பர வீடு – டாடாவின் அடுத்த திட்டம்
நடுத்தர வர்க்கத்தினரும் காரை சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்பதை தனது நானோ கார் மூலம் நனவாக்கியவர் டாடா. இதைத் தொடர்ந்து ரூ. 4 லட்சத்தில் குட்டி வீடு திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
தற்போது பெரும் பணக்காரர்களுக்கு வீடு கட்டித தரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார் ரத்தன் டாடா.
ரூ. 3 முதல் ரூ. 7 கோடிக்குள் இந்த வீடுகள் அமையுமாம். இவை அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்படும்.
இதுகுறித்து டாடா வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநரும், தலைமை செயதிகாரியுமான புரோட்டின் பானர்ஜி கூறுகையில், குறைந்த செலவிலான வீட்டு வசதித் திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக தொடங்கியுள்ளோம். இப்போது சொகுசுக் குடியிருப்புகளை கட்டப் போகிறோம். இதன விலை ரூ. 3 கோடி முதல் 7 கோடிக்குள் இருக்கும் என்றார்.
நானோவைத் தொடர்ந்து கடந்த தலா ரூ. 4 லட்சம் மதிப்பிலான 1300 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை டாடா தொடங்கியது. சுப் கிருஹா என்ற பெயரில் இந்த் திட்டத்தை டாடா செயல்படுத்துகிறது. மும்பையிலிருந்து 100 கிலோமீட்ட்ர் தொலைவில் உள்ள போய்சார் என்ற இடத்தில் இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை நாடு முழுவதும் கொண்டு செல்ல டாடா திட்டமிட்டுள்ளது.