அதிமுக பந்த்: பா.ம.க. பங்கேற்காது- ஜி.கே.மணி

திருநெல்வேலியில் நடந்த யாதவ மகாசபை மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாமக தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறுகையில்,
நாளை (27ம் தேதி) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க கலந்து கொள்ளாது.
தமிழ்நாட்டில் சட்டமேலவை வருவதை பா.ம.க முழுமையாக ஆதரிக்கிறது. இதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. பாமக உள்ளிட்ட எல்லாரும் அதில் இடம் பெற வாய்ப்புள்ளது.
மேலவையில் சமூகநீதி, மொழி, பண்பாடு மற்றும் மாநில வளர்ச்சியை உள்ளடக்கி பேசுவோர் அதிகம் இடம் பெற வேண்டும் என்பதே பா.ம.கவின் விருப்பம்.
இது தேர்தல் நேரம் இல்லை. எனவே கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. தமிழ்நாட்டில் 120 சட்டமன்ற தொகுதிகளில் பா.ம.க வலுவாக உள்ளது. இதில் 64 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பும் உள்ளது.
தேர்தல் நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தனித்து போட்டியா, கூட்டணி அமைத்து போட்டியா என்பது பற்றி முடிவு செய்யப்படும். வரும் தேர்தல்களில் பென்னாகரம் இடைதேர்தல் 'பார்முலா' அடிப்படையில் பணிகளை மேற்கொள்வோம் என்றார்.
புதிய தமிழகம் ஆதரவு:
அதே நேரத்தில் அதிமுக வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் கட்டமாக உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரத்தை பழைய ஒப்பந்தத்தை மாற்றி அமைத்து, முழுவதுமாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களை மிகவும் பாதித்துள்ளது. விலைவாசி உயர்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறிவிட்டன.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாளை நடத்தும் பொதுவேலை நிறுத்தத்துக்கு புதிய தமிழகம் கட்சி தார்மீக ஆதரவை அளிக்கிறது என்றார்.
தமுமுகவும் ஆதரவு:
இந் நிலையில் இந்த பந்துக்கு தமுமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐபிஎல் கிரிக்கெட் பிரச்சனையில், முன்னாள் அமைச்சர் சசி தரூர் ராஜினாமா என்பது பெயரளவில் தான் நடந்துள்ளது. இதன் மூலம் கிரிக்கெட்டில் பெரிய சூதாட்டம் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரபாகரன் தாயார் சிகிச்சைக்காக சென்னை வந்து திருப்பி அனுப்பியது தமிழக முதல்வருக்கு தெரியாது என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது மனித நேயத்திற்கு விரோதமான செயல்.
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக 27ம் தேதி அதிமுக நடத்தும் பந்துக்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம் என்றார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications