நித்யானந்தாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை-மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்

ஆனால், பரிசோதனையில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்ததையடுத்து இன்று அவர் வெளியேற்றப்பட்டார்.
இமாச்சல் பிரதேசத்தில் கைதான நித்யானந்தாவை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் 4 நாட்களாக தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்றுடன் அவரது போலீஸ் காவல் முடிவடைந்ததால் மாலை சி.ஐ.டி. அலுவலகத்தில் இருந்து நித்யானந்தாவை போலீஸ் வேனில் ராம்நகர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நீதிபதி நாராயண பிரசாத் (பொறுப்பு) முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நித்யானந்தாவின் வழக்கறிஞர் சந்திரமெளலி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
அப்போது நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நித்யானந்தா, போலீசார் தனக்கு சரியான நேரத்துக்கு உணவு கொடுப்பதாகவும், தியானம் நடத்த அனுமதிப்பதாகவும், எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.
இதையடுத்து ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, போலீசாரின் கோரிக்கையை ஏற்று அவரை மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மாலை 6.10 மணிக்கு நித்யானந்தா மீண்டும் சிஐடி போலீசார் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
அந்த அலுவலகத்தை நெருங்கியபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக நித்யானந்தா கூறினார். இதையடு்த்து அவரை பன்னரகட்டா சாலையில் உள்ள ஜெயதேவா அரசு இருதய மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இ.சி.ஜி. மற்றும் ரத்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட்டது.
நித்யானந்தாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை-டாக்டர்கள்:
இந் நிலையில் நித்யானந்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அவர்கள் கூறுகையி்ல், நித்யானந்தாவுக்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை. நெஞ்சு வலியும் இல்லை, காய்ச்சலும் இல்லை, ரத்த அழுத்தமும் இல்லை என்றனர்.
மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்:
இந் நிலையில் நித்யானந்தா இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சிஐடி போலீசார் மீ்ண்டும் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை தொடர்கிறது.
நேற்றிரவு நித்யானந்தா அனுமதிக்கப்பட்டதால் ஜெயதேவா மருத்துவமனையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இவர்கள் நேற்றிரவு மருத்துவமனைக்கு வெளியே தரையில் படுத்துத் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளிகளும் பொது மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications