விரைவில் ஹெட்லியை விசாரிக்க அனுமதி கிடைக்கும்- இந்திய தூதரகம்
வாஷிங்டன்: விரைவில் டேவிட் கோல்மேன்ஹெட்லியை விசாரிக்க அமெரிக்காவின் அனுமதி கிடைக்கும் என்று அமெரிக்கவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் அமெரிக்க அரசு தலைமை வழக்கறிஞர் எரிக் ஹோல்டருடன், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கோபால்சுப்ரமணியம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இத்தகவலை ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரும் இந்த சந்திப்பின்போது உடன்இருந்தார். அப்போது ஹோல்டர் கூறுகையில், விரைவில் ஹெட்லியை இந்தியா விசாரிக்க அனுமதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் எவ்வளவு விரைவாக ஹெட்லியை விசாரிக்க அனுமதிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன. எனவே ஹெட்லியை விசாரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்காவுக்கு இந்தியத் தரப்பு எடுத்துக் கூறியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications