ஐபிஎல்3 குறித்து ட்விட்டர் மூலம் ‘குவிஸ்’ நடத்தும் லலித் மோடி!
டெல்லி: ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டுள்ள லலித் மோடி இப்போது குவிஸ் மாஸ்டராக மாறியுள்ளார். 3வது ஐபிஎல் குறித்து ட்விட்டர் மூலம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதிலையும் அளித்து வருகிறார்.
ஐபிஎல் ஊழல்குறித்து நாடுதான் படு சூடாக உள்ளது. ஆனால், மோடி படு கூலாகத்தான் இருக்கிறார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜில் ஜில்லென்று ட்விட்டர் மூலம் 3வது ஐபிஎல் தொடர் குறித்து கேள்வி கேட்டு பதிலையும் கொடுத்து குவிஸ் மாஸ்டர் போல மாறியுள்ளார்.
2010 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியது யார். இடது கை தொடக்க ஆட்டக்காரர்களா அல்லது வலது கை தொடக்க ஆட்டக்காரர்களா என்பது ஒரு கேள்வி. அதற்கு அவரே கொடுத்துள்ள பதிலில், வலது கை தொடக்க ஆட்டக்காரர்கள் 32.80 சதவீதமும், இடதுகை ஆட்டக்காரர்கள், 25.83 சதவீதமும் சிறப்பாக ஆடினர் என்பது.
அதேபோல மோடி கேட்ட இன்னொரு கேள்வி - 2வதாக பேட்டிங் செய்த அணிகளுக்கு எந்த ஓவரில் அதிக ரன்கள் கிடைத்தன. நிச்சயமாக 20வது ஓவர் இல்லை, சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்டிருந்தார் மோடி. அதற்கு அவர் கொடுத்த பதில், 4வது ஓவர்.
செய்தியாளர்கள் மீது பாய்ச்சல்
இதற்கிடையே, இன்று டெல்லிக்கு வந்தார் மோடி. அப்போது அவரை ஏராளமான செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் கோபத்தைக் காட்டினார் மோடி.
ஏன் என்னை காரில் விடாமல் தடுக்கிறீர்கள். ஏன் என்னைத் தடுத்துத் தொல்லை செய்கிறீர்கள். ஜென்டில்மேன்களாக நடந்து கொள்ள மாட்டீர்களா என்று கோபமாக் கேட்டார். பின்னர் அவரது பாடிகார்டுகள் மோடியை அவரது காருக்கு அழைத்துச் சென்று ஏற்றி அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications