பிரதமருக்கும், காங்கிரஸுக்கும் இடையே சண்டையை மூட்ட முயலும்
Subscribe to Oneindia Tamil
திம்பு: பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுடன் இயல்பு நிலை ஏற்பட விரும்புகிறார். ஆனால் அதை காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் தடுக்க முயலுகிறார்கள் என்று கூறியுள்ளது பாகிஸ்தான்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திம்பு வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறுகையில், பாகிஸ்தான், இந்தியா இடையே நல்லுறவு ஏற்பட பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறார். ஆனால் சில காங்கிரஸ் தலைவர்கள் அதை விரும்பவில்லை.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் பேசுவதில்லை என்ற இந்தியாவின் நிலை தவறானது. இதனால் யாருக்கும் லாபம் இல்லை.
மும்பை சதிகாரர்கள் தொடர்பாக பாகிஸ்தான் பல படி முன்னேறியுள்ளது. இருப்பினும் இந்தியா அப்படியே இருப்பது வருத்தம் தருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications