புளியங்குடியில் நெல்லிக்காய் விலை கடும் வீழ்ச்சி

புளியங்குடி பகுதியில் எலுமிச்சை உற்பத்தி மற்றும் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதற்கென பிரத்யோகமாக உள்ள மார்க்கெட்டில் ஏலம் முறையில் எலுமிச்சை பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் பழங்கள் 3 ஆயிரம் வரை விற்று வந்த நிலையில் 10 நாட்களாக கோடை மழை பெய்ததால் 1700லிருந்து 2 ஆயிரம் வரை விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 200 ஏக்கருக்கு மேல் சுமார் 5 ஆயிரம் நெல்லி மரங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை பலன் ஓட்டுரக பெரிய நெல்லிக்காய் இதே மார்க்கெட்டில் 60 முதல் 70 கிலோ எடை கொண்ட மூடை ரூ.1600 முதல் விற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரூ.800ஆக பாதி விலைக்கு சரிந்தது.
எலுமிச்சை பழத்தின் விலை சரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வரும் விவசாயிகள் மத்தியில் தற்போது நெல்லிகாய் விலையும் வீழ்ச்சியடைந்ததை அடுத்து பெரும் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications