சென்னையில் ஆட்டோ பர்மிட்டுக்கு தடை ரத்து! - அமைச்சர் கே என் நேரு

தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு நேற்று பதில் அளித்து அவர் நேற்று பேசியது:
கடந்த 12 ஆண்டுகாலமாக சென்னையில் ஆட்டோ ரிக்ஷாக்களை பதிவு செய்வதற்கான தடை நடைமுறையில் உள்ளது. சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 10 ஆயிரம் புதிய பெர்மிட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னையில் தற்போது சுமார் 52 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. சென்னையைவிட சிறிய நகரங்களான பெங்களூருவில் 78 ஆயிரம் ஆட்டோக்களும், ஐதராபாத்தில் 64 ஆயிரம் ஆட்டோக்களும் ஓடுகின்றன.
அதனால், சென்னையில் கூடுதல் ஆட்டோ ரிக்ஷாக்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு, ஆட்டோக்கள் பதிவு செய்யப்படுவதற்கான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ரிக்ஷா பெர்மிட்டுகள் தகுதி அடிப்படையில் விண்ணப்பம் செய்வோருக்கு வழங்கப்படும்.
சென்னையில் ஆட்டோ வாங்கும்போது மார்வாடிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்கும் நிலை இருக்கிறது. இதில் பல ஆயிரம் ரூபாய் வீணாக செலவாகிறது. எனவே, இது போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாமல், சென்னையில் இனி யார் வேண்டுமானாலும் ஆட்டோ வாங்கலாம். இதற்குரிய உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்.
விபத்துக்கு உடனுக்குடன் இழப்பீடு!
தமிழகத்தில் 20,399 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் பஸ், மினிபஸ், ஆட்டோ, மேக்சி கேப் உள்ளிட்ட 8 லட்சத்து 33 ஆயிரத்து 948 போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. அதுபோல், 99 லட்சத்து 69 ஆயிரத்து 598 இருசக்கர வாகனங்கள், 10.40 லட்சம் கார்கள் உள்ளிட்ட 1 கோடியே 13 லட்சத்து 23 ஆயிரத்து 13 வாகனங்கள் உள்ளன. மொத்தத்தில், 1 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 961 வாகனங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 3,280 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த ஆட்சி பொறுப்பேற்றபிறகு, 15 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இதுதவிர இந்த நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும். விபத்து, ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு தரும் திட்டமும் அமல்படுத்தப்படும்.
சென்னையில் 3500 மினிபஸ்
தமிழகத்தில் 3,500 புதிய மினி பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முடிந்ததும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில் மினி பஸ் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அலுவலகம், பஸ் நிலையம் போன்ற இடங்களுக்கு பொதுமக்களை அழைத்துச் செல்லும் இணைப்பு சேவையான, 'கனெக்டிங் சர்வீஸ்' (ஷார்ட் வீல் பஸ்) என்ற பஸ்கள் இயக்கப்படும்.
இது பொதுமக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறது. அவர்களது அறிக்கை கிடைத்ததும், மேல்நடவடிக்கை எடுக்கப்படும்..." என்றார் நேரு.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications