ஒருமையில் பேசிய அதிமுக எம்.பி – கண்டித்த கனிமொழி
டெல்லி : ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது திமுக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லியைப் பார்த்து அதிமுக உறுப்பினர் இளவரசன் ஒருமையில் பேசியதால் அவருக்கு கனிமொழி உள்ளிட்ட உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நேற்று ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. அப்போது அதிமுக உறுப்பினர் இளவரசன், திமுக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லியைப் பார்த்து ஒருமையில் பேசியதாக தெரிகிறது.
இதை கனிமொழி கண்டித்தார். மேலும் திமுக உறுப்பினர்களும் கண்டித்துப் பேசினர். அதிமுக உறுப்பினருக்கு ஆதரவாக டாக்டர் மைத்ரேயன் பேசியதால் குழப்பம் மேலும் கூடியது.
இதையடுத்து குறுக்கிட்ட அவையை நடத்தி வந்த தற்காலிக தலைவர் ரகுமான்கான் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது குறுக்கிட்டமத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்த விவகாரத்தில் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ ஏதாவது தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுபற்றி விசாரணை நடத்துமாறு அவைத் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்., அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தைப் பற்றி பேசும்போது தேவையில்லாமல் தனி நபர்களை மரியதைக் குறைவாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
இந்த சண்டையால் சிறிது நேரம் ராஜ்யசபாவில் அமளி நிலவியது.












Click it and Unblock the Notifications