ஓடி விடுவார் என்ற சந்தேகத்தில் வீட்டில் சிறை வைக்கப்பட்ட பேராசிரியை மீட்பு
குளச்சல்: காதலனுடன் ஓடிவிடுவார் என நினைத்து வீட்டில் சிறை வைக்கப்பட்ட நாகர்கோவி்ல் பேராசிரியை நேற்று மீட்கப்பட்டார்.
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சுவாதிகா. இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த குலசேகரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்தார். இருவரின் காதல் விவகாரமும் ரகசியமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் திடீரென சுவாதிகாவின் காதல் விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மகளின் காதலை ஏற்க மறுத்தனர். நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்குதான் கழுத்தை நீட்ட வேண்டும். மீறி ஏதாவது நடந்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என பெற்றோர் மிரட்டினர்.
இதனால் பெற்றோரின் மிரட்டலுக்கு பயந்து சுவாதிக்கு சில காலம் அமைதியானார். ஆனால் அவருக்குள் இருந்த காதல் மறையவில்லை.
இதற்கிடையே சுவாதிகாவுக்கு வேறோரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நாளை 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்திற்கு நாள் நெருங்கிய நேரத்தில் மகளின் நடத்தையில் மாற்றம் தெரிந்ததால் சுவாதிகாவை வீட்டை வெளியே அனுப்ப கூடாது என முடிவெடுத்தனர் அவரது பெற்றோர் கடந்த நான்கு நாட்களாக அவரை வீட்டு சிறையில் வைத்தனர்.
சாப்பாடு, தண்ணீர் எல்லாம் அவர் அறைக்கு சென்றது. இந்த நிலையில் நேற்று காலை சுவாதிகாவுக்கு செல்போன் ஒன்று கிடைத்தது. காதலனுக்கு போன் செய்து வரவழைக்க முடிவு செய்தார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்காது என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார்.
இதையடுத்து போலீசார் சுவாதிகாவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது சுவாதிகா எழுதியதாக ஒரு கடிதத்தை அவரது பெற்றோர் போலீசாரிடம் அளித்தனர். அதில் எனது பெற்றோர் விருப்பப்பட்ட இடத்தில் திருமணம் செய்து கொள்வேன். தெரியாமல் போலீசுக்கு தொந்தரவு செய்து விட்டேன் என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications