லெனினுக்கு மிரட்டல்-நித்யானந்தாவை விசாரிக்க சென்னை போலீஸ் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக சென்னை தனிப்படை போலீசார் விரைவில் பெங்களூர் சென்று நித்யானந்தாவிடம் நேரில் விசாரணை நடத்தவுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நிதியானந்தாவின் பிடுதி ஆசிரமத்தில் இன்னும் ஏராளமான பக்தர்கள் தங்கியிருந்து தியானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல வெளிநாட்டு பக்தர்களும் அடக்கம்.

ஆசிரமத்தின் நுழைவாயிலில் கர்நாடக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரமத்திற்கு வருபவர்களை விசாரித்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர்.

பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என தியான பீட நிர்வாகிகள் கூறியுள்ளதால் அவர்களை போலீசார் அனுமதிக்க மறுக்கின்றனர்.

ஜாமீன் மனு இன்று விசாரணை:

இதற்கிடையே ஜாமீன் கோரி மனு நித்யானந்தா தாக்கல் செய்துள்ள மனு இன்று ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இப்போது அவர் ராம்நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+