முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை – நியூயார்க் மேயர் எச்சரிக்கை
நியூயார்க்: நியூயார்க்கில் கார் குண்டு மூலம் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானிய அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளதன் எதிரொலியாக முஸ்லீம்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்க எடுக்கப்படும் என நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் எச்சரித்துள்ளார்.
நியூயார்க்கில் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பைசல் சஷாத் என்ற பாகிஸ்தானிய அமெரிக்கர் கைதாகியுள்ளார். இதையடுத்து முஸ்லீம்கள் மீது அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பதட்டம் எழுந்துள்ளது.
இதுகுறித்து நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் கூறுகையில், பாகிஸ்தானியர்களுக்கு எதிராகவோ, முஸ்லீம்களுக்கு எதிராகவோ யாரேனும் தாக்குதலில் இறங்கினால் அவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று எச்சரித்தார்.
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லீம்களுக்கும், சீக்கியர்களுக்கும் எதிராக அமெரிக்காவின் பல பகுதிகளில் தாக்குதல் நடந்தது நினைவிருக்கலாம். ஆப்கானிஸ்தானியர்கள் வைத்திருப்பதைப் போன்ற நீண்ட தாடியுடன் இருப்பதால் சீக்கியர்களும் தாக்குதலில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications