தீவிரவாதப் பயிற்சி பெற்றேன் – யு.எஸ்.சில் சிக்கிய பாக். நபர் ஒப்புதல்

நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு உரிய நேரத்தில் செயலிழக்க வைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் கனக்டிகட்டில் வசித்து வரும் பாகிஸ்தானிய அமெரிக்கரான பைசல் சஷாத் என்பவருடைய கார் அது என்று தெரியவந்தது.
இதையடுத்துஎப்.பி.ஐ. அதிகாரிகள் வழக்கை கையில் எடுத்தனர். அமெரிக்க விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. விமானம் மூலம் துபாய் செல்ல முயன்ற சஷாத்தை எப்ஐபி அதிகாரிகள் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தவர் சஷாத் என்பது தெரிய வந்துள்ளது.
நேற்று எப்பிஐ சார்பில் நியூயார்க் கோர்ட்டில் நீதிபதி நாதனியல் பாக்ஸ் முன்பு சஷாத் மீது புகார்ப் பதிவு செய்யப்பட்டது. அதில், குண்டு பொருத்தப்பட்டிருந்த தனது ஸ்போர்ட்ஸ் காரை கனக்டிகட்டிலிருந்து நியூயார்க்குக்கு சஷாத் ஓட்டிச் சென்றார். காரை டைம்ஸ் சதுக்கத்தில் நிறுத்தி விட்டு தப்பி விட்டார்.
துபாய் செல்ல முயன்றபோது ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது டைம்ஸ் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டுகளை வைத்த்து நான்தான் என்பதை சஷாத் ஒத்துக் கொண்டார். அமெரிக்கர்களைக் கொல்லவும், பீதியில் ஆழ்த்தவும் இந்தத் திட்டத்தை தீட்டியதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் வெடிகுண்டுகள் தயாரிப்பு தொடர்பான பயிற்சியைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்று எப்பிஐ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் கூறுகையில், விசாரணைக்கு சஷாத் முழு ஒத்துழைப்பு தருகிறார். பல உபயோகரமான தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications