பதவிக் கால பிரச்சினை- பிரதமருடன் ஒலிம்பிக் சங்கத் தலைவர் கல்மாடி சந்திப்பு

இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனம் ஆகியவற்றின் நிர்வாகிகளின் பதவிக்காலம் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளார் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில்.
இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கில்லை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக் சங்கத் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான சுரேஷ் கல்மாடி, செயலாளர் ரந்தீர் சிங், இந்திய வில்வித்தை சங்கத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்தனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டனர்.
மேலும், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று சுட்டிக் காட்டி சர்வதேச ஒலிம்பிக் சங்கம்அனுப்பிய கடித்த்தையும் பிரதமரிடம் அவர்கள் வழங்கினர்.
பின்னர் கல்மாடி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரம் குறித்து பரிசீலிப்பதாக பிரதமர்உறுதியளித்தார் என்றார்.












Click it and Unblock the Notifications