தமிழக சட்ட மேலவைக்கான மசோதா அதிமுக எதிர்ப்புக்கிடையே ராஜ்யசபாவில் தாக்கல்

தமிழகத்தில் இயங்கி வந்த சட்ட மேலவை கடந்த 1986-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபோது இரண்டுமுறை மேலவையை அமைக்க முயற்சித்தது. இருப்பினும் அது முடியவில்லை. பின்னர் வந்த அதிமுக அரசு இதுதொடர்பான தீர்மானத்தை ரத்து செய்து விட்டதால், மேலவைக்கு உயிர்கொடுக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
இந்தநிலையில் தற்போதைய திமுக அரசு மீண்டும் மேலவையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. இதுதொடர்பாக கடந்த மாதம் 12ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் தரப்பட்டது.
இதையடுத்து இன்று ராஜ்யசபாவில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மசோதாவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்ட மலேவை மசோதா -2010 என்ற பெயரிலான அந்த மசோதாவை தாக்கல் செய்த வீரப்ப மொய்லி, 78 உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த மேலவை அமையும்.
கடந்த 1986ம் ஆண்டு தமிழகத்தில் மேலவை கலைக்கப்பட்டது. இருப்பினும் 2010, ஏப்ரல் 12ம் தேதி மேலவையை மீண்டும் உருவாக்குவது தொடர்பான தீர்மானத்தை தமிழக சட்டசபை நிறைவேற்றியது என்றார்.
மசோதாவை வீரப்ப மொய்லி தாக்கல் செய்து பேசியபோது அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் எழுந்து, இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. இதை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சட்ட மேலவை இல்லாமலேயே தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பல வளர்ச்சித் திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளது என்றார் மைத்ரேயன்.












Click it and Unblock the Notifications