வங்கி அலுவலர் வங்கியில் தீக்குளித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: வங்கி அலுவலர் வங்கியிலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (27). இவர் நாமக்கல்லில் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் அக்ரிகல்சரல் பீல்ட் ஆபீசராக பணியாற்றி வருகின்றார்.
வழக்கம் போல் வங்கிக்கு வந்த கார்த்திகேயன், மாடியில் இருக்கும் கழிவறைக்குச் சென்று மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இிதில் அவரது உடல் முழுக்க தீ பரவி பரிதாபமாக இறந்தார்.
கார்த்திகேயன் தற்கொலை குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications