டைம்ஸ் சதுக்க கார் குண்டுச் சம்பவம்- பின்னணியில் பாக். தலிபான்: அமெரிக்கா
வாஷிங்டன்: நியூயார்க்,டைம்ஸ் சதுக்க கார் குண்டுப் பின்னணியில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் கூறுகையில், தோல்வி அடைந்த நியூயார்க் கார் குண்டு சம்பவத்தின் பின்னணியில், பாகிஸ்தான் தலிபான் அமைப்பு நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது.
இந்த சதித் திட்டத்திற்கு உத்தரவிட்டது, இயக்கி செயல்படுத்த முனைந்தது இந்த அமைப்புதான். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானிய அமெரிக்கரான பைசல் சஷாத், கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் பாகிஸ்தானில் தங்கியிருந்து பயிற்சி பெற்றுள்ளார். பிப்ரவரி மாதம்தான் அவர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். அதன் பின்னர் கார் குண்டு தொடர்பான பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
இந்த திட்டத்தை வடிவமைத்ததோடு, அதற்கான செலவுகளுக்கான பணத்தையும் கூட பாகிஸ்தான் தலிபான் அமைப்பே வழங்கியுள்ளது என்றார் எரிக் ஹோல்டர்.












Click it and Unblock the Notifications