Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்​து​வாக இருப்​பதே குற்​றம்​ போலி​ருக்​கி​றது-தொகாடியா

Subscribe to Oneindia Tamil

காந்​தி ​ந​கர்: குஜ​ராத்தில் நடந்த மதக் கலவரங்கள் தொடர்​பாக சிறப்பு விசா​ர​ணைக் குழு ​(எஸ்​ஐடி)​ முன் ஆஜரான விஸ்வ ஹிந்து பரி​ஷத் சர்வதேசத் தலைவர் பிர​வீண் தொகா​டியாவிடம் 4 மணி நேரம் விசா​ரணை நடந்தது.

கு​ஜ​ராத் மாநி​லத்​தில் 2002ம் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமான அப்பாவிகள் பலியாயினர்.

இது தொடர்பாக குஜராத் அரசு நடத்திய விசாரணைகளில் உண்மைகள் மறைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.

இந்தக் குழு கடந்த மார்ச் மாதம் குஜ​ராத் முதல்​வர் நரேந்​திர மோடி​யி​டம் விசா​ரணை நடத்​தி​யது.​

அதே போல பிர​வீண் தொகா​டி​யா​வுக்கும் எஸ்​ஐடி சம்​மன் அனுப்​பியது. ஆனால், அவர் ஆஜ​ரா​காமல் இருந்து வந்தார். இந் நிலையில் நேற்று எஸ்​ஐடி முன் ஆஜ​ரா​னார்.​

அகம​தா​பா​த்தி​லுள்ள மகா​லட்​சுமி கோயி​லிலும் காந்திநகர் பஞ்​ச​தேவ கோயி​லிலும்,​ தரி​ச​னம் செய்துவிட்டு காந்​தி​ந​கர் பழைய தலை​மைச் செய​லக அலு​வ​லக வளா​கத்​தி​லுள்ள எஸ்​ஐடி அலு​வ​ல​கத்​துக்கு 100 விஎச்பி தொண்​டர்​க​ள்,​​ சாதுக்​க​ளுடன் தொகாடியா வந்​தானர்.

அவருடன் வந்தவர்கள் அலு​வ​ல​கத்​துக்கு வெளியே அவர்​கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை எழுப்​பி​னர்.

அப்போது நிரு​பர்​க​ளி​டம் பேசிய தொகா​டியா, என் மீது என்ன புகார் கொடுத்​தி​ருக்​கி​றார்​கள் என்று தெரி​ய​வில்லை.​ புகார் நக​லை​யும் அதி​கா​ரி​கள் என்​னி​டம் தர​வில்லை.​ உச்ச நீதி​மன்ற உத்​த​ர​வுக்​குக் கட்​டுப்​பட்டு நான் விசா​ர​ணைக் குழு முன்பு ஆஜ​ராக வந்​தி​ருக்​கி​றேன் என்​றார்.​

பின்னர் அவர் உள்ளே சென்றார். இதையடுத்து அவருடன் வந்த ஆதரவாளர்கள் அலு​வ​ல​கத்​துக்கு எதி​ரே​ உள்ள புல்​வெ​ளி​யில் அமர்ந்து பஜ​னைப் பாடல்​களை பாட ஆரம்பித்தனர்.

சுமார் 4 மணி நேரம் தொகாடியாவிடம் விசாரணை நடந்தது. சிபிஐ முன்​னாள் டிஐஜி ஏ.கே.​ மல்​ஹோத்ரா, அவரிடம் விசா​ர​ணை நடத்​தி​னார்.​

விசாரணை முடிந்து வெளியே வந்த தொகா​டியா நிரு​பர்​க​ளி​டம் பேசுகையில், இந்த நாட்​டில் இந்​து​வாக இருப்​பதே குற்​றம்​தான் போலி​ருக்​கி​றது.​ என்​னைத் தூக்​கில் போடு​வ​தற்​கா​கத்​தான் எஸ்​ஐடி உரு​வாக்​கப்​பட்​டது போலும்.​ ஒரு​வேளை என் பெயர் ஹு​சைன் என்று இருந்​தால் என்னை அவர்​கள் விசா​ரிக்​கா​மல் விட்​டி​ருப்​பார்​கள்.​

நான் இந்து என்ற கார​ணத்​தால்​தான் என்னை எஸ்​ஐடி போலீ​ஸார் விசா​ர​ணைக்கு அழைத்​துள்​ள​னர்.​

கு​ஜ​ராத் மாநி​லத்​தில் எந்த ஒரு இந்​துக்​கும் பாது​காப்​பில்லை.​ புனி​தப் போர் என்று சொல்​லிக் கொண்டு இந்​தியா மீது ஜிஹா​தி​கள் தாக்​கு​தல் நடத்தி வரு​கின்​ற​னர்.​ இந்​துக்​கள்,​​ சாதுக்​கள்,​​ கோயில்​கள்,​​ கோயில் சார்ந்த அமைப்​பு​கள் மீது அவர்​கள் தாக்​கு​த​லைத் தொடுத்து வரு​கின்​ற​னர்.​

க​ல​வ​ரம் நடப்​ப​தற்கு ஓராண்​டுக்கு முன்பு ஏற்​பாடு செய்​யப்​பட்ட கூட்​டங்​க​ளில் என்ன பேசி​னீர்​கள் என்று விசா​ர​ணை​யின்​போது கேட்​ட​னர்.​ கல​வ​ரத்​தின்​போது நான் ஏன் குஜ​ராத்​தில் இருந்​தேன்?​ யார் யாரி​டம் பேசி​னேன் என்​றும் விசாரித்தனர்.

நான் ஒரு இந்து.​ குஜ​ராத்​தில் இருப்​ப​தற்கு எனக்கு உரிமை உள்​ளது.​ எனக்கு நாட்​டி​லுள்ள 82 கோடி இந்து மக்​க​ளைத் தெரி​யும்.​ யார்?​ யாரி​டம் பேசி​னேன் என்​ப​தற்கு யார் பெய​ரைச் சொல்​வது என்று அவ​ரி​டம் திருப்​பிக் கேட்​டேன் என்​றார் தொகாடியா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+