கொல்லத்தில் சாப்பிடக் கூட காசமில்லாமல் தவிக்கும் ஈழத் தமிழர்கள்

கொல்லத்தில் கடந்த 7ம் தேதி இரவு ஒரு பிரபல விடுதியில் தங்கியிருந்த 37 இலங்கை தமிழர்களை கேரள காவல்துறையினர் கண்டுபிடித்து அவர்கள் விடுதலை புலிகளா, என்றும் ஏன் கேரளா வந்தார்கள் என்றும் விசாரணை நடத்தினர். மத்திய பாதுகாப்பு பிரிவு, மாநில உளவு பிரிவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளும் நடத்திய விசாரணையில் இவர்களை கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுளுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்க டென்னீசன் என்பவர் அழைத்து வந்தது தெரிய வந்தது.
இதில் டென்னீசன்தான் முக்கிய குற்றவாளி என்பது தெரிய வந்ததால் அவரை கைது செய்தனர். மற்றவர்களை விடுவிக்க கேரள காவல்துறை முடிவு செய்து தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து நேற்று இரவு சென்னையில் இருந்து கியூ பிராஞ்ச் போலீசார் கொல்லம் சென்றனர்.
இன்று அவர்களை கேரள போலீசார் விடுவித்துவிட்டனர்.
முன்னதாக காவல்துறையின் விசாரணையில் இருந்த இவர்களுக்கு கொல்லம் இன்ஸ்பெக்டர் விஜயன் தனது சொந்த செலவில் நேற்று இரவு வரை சாப்பாடு வழங்கியுள்ளார்.
இன்று காலை முதல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையுள்ள இலங்கை தமிழர்கள் சாப்பாட்டுக்கு வழியின்றியும், விடுதி கட்டணம் சுமார் ரூ.6 ஆயிரம் கட்ட முடியாமலும், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு செல்ல வாகன வசதியின்றியும் நிராயுதபாணியாக அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்திலிருந்து இலங்கை தமிழர்களை ஏற்றுக் கொண்டு சென்னை செல்ல வாகன ஓட்டிகளும் தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications