காங்கிரஸ் 125வது ஆண்டு விழா- தமிழகத்தில் கொண்டாட 128 பேர் குழு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவை தமிழகத்தில் கொண்டாட 128 பேர் கொண்ட குழுவை மாநிலத் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்,.
இதுகுறித்து தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய தேசியக் காங்கிரஸ் 125-ம் ஆண்டு விழா-கக்கன்ஜி நூற்றாண்டு விழாக்குழு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநில அளவில் விரைவில் நடைபெறவுள்ள விழாவை முன்னின்று நடத்துவதற்காக, மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன், எம்.பி., ஆகியோர் விழாக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அதே போல், டி.சுதர்சனம், மணிசங்கர் அய்யர், எம்.பி., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குமரி அனந்தன், எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, பி.எஸ்.ஞானதேசிகன், என்.எஸ்.வி. சித்தன், எம்.சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம். ஆரூண், கே.எஸ்.அழகிரி, மாணிக்க தாகூர், எஸ்.ராமசுப்பு, பெ.விஸ்வநாதன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் காயத்ரி தேவி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 128 பேர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications