கத்காரிக்கு மன வளம் வற்றிப் போய் விட்டது –லாலு பதிலடி
Subscribe to Oneindia Tamil
பாட்னா: எங்களைப் பார்த்து நாய்கள் என்றுகூறியுள்ள பாஜக தலைவர் நிதின் கத்காரிக்கு மன வளம் வற்றிப் போய் விட்டது என்று பதிலடி கொடுத்துள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
தன்னையும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய கத்காரிக்குப் பதிலடி கொடுத்துள்ள லாலு, மன வளம் வற்றிப் போய் விட்டது கத்காரிக்கு. முதலில் அவரது மனநலத்தை சரி செய்ய நாங்கள் அவருக்கு மாத்திரை கொடப்போம். அதன் பின்னர் கேப்சூல்களைக் கொடுப்போம். அதுவும் பலனளிக்காவிட்டால் ஊசி போட்டு குணமாக்குவோம்.
தனது கட்சியினர் பலர் சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் போட்டு குவித்து வைத்துள்ளனர். அவர்கள் சிபிஐ வலையில் சிக்கிக் கொள்ளாமல் தடுக்கவே, சிபிஐக்கு எதிராக அவர் தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார் என்று கூறினார் லாலு.












Click it and Unblock the Notifications