மதுரையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட போலீஸ் நிழற்குடை திறப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: நாட்டிலேயே முதல் முறையாக மதுரை மாநகரில் முற்றிலும்ம் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட போலீஸ் நிழற்குடை திறக்கப்பட்டுள்ளது.
ஆவின் சந்திப்பில் இந்த நிழற்குடை நிறுவப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ. 3 லட்சமாகும். இதை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பாலசுப்ரமணியன் இன்று திறந்து வைத்தார்.
வெறும் நிழற்குடையாக மட்டுமல்லாமல், மதுரை குறித்த சுற்றுலாத் தகவல்கள், ரயில், விமான பயண நேரங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, முதலுதவி சாதனங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிழற்குடை திறக்கப்படுவது இந்தியாவிலேயே மதுரையில் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications