பிளஸ் டூ: சென்னை மாணவி-தூத்துக்குடி மாணவன் முதலிடம்

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 85.2 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
1,187 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.
1,186 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி சந்தியா,
கிருஷ்ணகிரி மாணவி காருண்யா, மாணவன் திணேஷ் ஆகியோர் 2வது இடம் பிடித்துள்ளனர்.
1185 மதிப்பெண்களுடன் விருதுநகர் பிரவக்ஷனா, ஈரோடு மனோசித்ரா, நாமக்கல் அபிநயா, அரியலூர் அன்டோ நதாரினி, செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ஆகியோர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
கம்ப்யூட்டர் அறிவியலிலும் தூத்துக்குடி மாணவர் பாண்டியனே 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தாவரவியலில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மாணவி ஜெனிஷா 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
விலங்கியலில் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மாணவர் ஜெயனந்தா எட்வின் 200 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
புள்ளியியலில் ஈரோடு மாணவர் தீரஜ் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், புவியியலில் மதுரை மாணவி பரமேஸ்வரி 197 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.
மாநில அளவில் சென்னை அனு முதலிடம்:
தமிழை மொழிப் பாடமாக எடுத்து படித்த பாண்டியன் முதலிடத்தைப் பிடித்திருந்தாலும், மொத்த மதிப்பெண் அடிப்படையில், சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி அனு ஆசைத்தம்பிதான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
1200 மதிப்பெண்களுக்கு அனு 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள்:
சமஸ்கிருதம் - 198
ஆங்கிலம் - 193
இயற்பியல் - 198
வேதியல் - 199
உயிரியல் - 200
கணிதம் - 200
மொத்தம் – 1188
பிளஸ்டூவில் தமிழை முதல்மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்குத்தான் அதிகாரப்பூர்வமாக முதலிடம் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தூத்துக்குடி பாண்டியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அதேசமயம், மொத்த மதிப்பெண் அடிப்படையில் பார்க்கும்போது பாண்டியனை விட ஒரு மதிப்பெண் கூடுதலாகப் பெற்றுள்ள அனுதான் முதலிடத்தில் வருகிறார்.
வெளி மாவட்ட மாணவர்கள் சாதனை:
சென்னை மாணவர்கள் யாரும் முன்னணி இடங்களைப் பெறவில்லை. அனைத்து இடங்களையுமே வெளி மாவட்ட மாணவர்கள்தான் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மார்ச் மாதம் நடந்த பிளஸ்டூ தேர்வை ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்தன. அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி முடிவை வெளியிட்டார்.
முதலிடம் பிடித்த மாணவன் பாண்டியன் கூறுகையில், அடுத்து பி.இ படிக்க விரும்புகிறேன். அதை முடித்துவிட்டு ஐஏஎஸ் படிக்க விரும்புகிறேன் என்றார்.
இவருடைய தந்தை ராஜூ நெடுஞ்சாலைதுறை பொறியாளராக உள்ளார். தாய் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
உங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications