Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளஸ் டூ: சென்னை மாணவி-தூத்துக்குடி மாணவன் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

Pandian with Parents
சென்னை: இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த தூத்துக்குடி மாணவர் பாண்டியனும், சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்துப் படித்த சென்னை மாணவி அனுவும் முதலிடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 85.2 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

1,187 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.

1,186 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி சந்தியா,
கிருஷ்ணகிரி மாணவி காருண்யா, மாணவன் திணேஷ் ஆகியோர் 2வது இடம் பிடித்துள்ளனர்.

1185 மதிப்பெண்களுடன் விருதுநகர் பிரவக்ஷனா, ஈரோடு மனோசித்ரா, நாமக்கல் அபிநயா, அரியலூர் அன்டோ நதாரினி, செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ஆகியோர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.

கம்ப்யூட்டர் அறிவியலிலும் தூத்துக்குடி மாணவர் பாண்டியனே 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தாவரவியலில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மாணவி ஜெனிஷா 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

விலங்கியலில் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மாணவர் ஜெயனந்தா எட்வின் 200 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

புள்ளியியலில் ஈரோடு மாணவர் தீரஜ் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், புவியியலில் மதுரை மாணவி பரமேஸ்வரி 197 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.

மாநில அளவில் சென்னை அனு முதலிடம்:

தமிழை மொழிப் பாடமாக எடுத்து படித்த பாண்டியன் முதலிடத்தைப் பிடித்திருந்தாலும், மொத்த மதிப்பெண் அடிப்படையில், சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி அனு ஆசைத்தம்பிதான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

1200 மதிப்பெண்களுக்கு அனு 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள்:

சமஸ்கிருதம் - 198

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 198

வேதியல் - 199

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் – 1188

பிளஸ்டூவில் தமிழை முதல்மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்குத்தான் அதிகாரப்பூர்வமாக முதலிடம் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தூத்துக்குடி பாண்டியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அதேசமயம், மொத்த மதிப்பெண் அடிப்படையில் பார்க்கும்போது பாண்டியனை விட ஒரு மதிப்பெண் கூடுதலாகப் பெற்றுள்ள அனுதான் முதலிடத்தில் வருகிறார்.

வெளி மாவட்ட மாணவர்கள் சாதனை:

சென்னை மாணவர்கள் யாரும் முன்னணி இடங்களைப் பெறவில்லை. அனைத்து இடங்களையுமே வெளி மாவட்ட மாணவர்கள்தான் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மார்ச் மாதம் நடந்த பிளஸ்டூ தேர்வை ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்தன. அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி முடிவை வெளியிட்டார்.

முதலிடம் பிடித்த மாணவன் பாண்டியன் கூறுகையில், அடுத்து பி.இ படிக்க விரும்புகிறேன். அதை முடித்துவிட்டு ஐஏஎஸ் படிக்க விரும்புகிறேன் என்றார்.

இவருடைய தந்தை ராஜூ நெடுஞ்சாலைதுறை பொறியாளராக உள்ளார். தாய் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.


உங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+