சமச்சீர் கல்வித் திட்டத்திலான 1, 6ம் வகுப்பு பாட நூல்கள் வெளியீடு
சென்னை: தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்திலான ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாட நூல்களை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்து அறிவித்திருந்தது.
அதன்படி, சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள முதல் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் 2010-2011-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இதற்காகப் பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ள புதிய பாடநூல்களைத் தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டுள்ளது. அச்சிடப்பட்டுள்ள முதலாம் வகுப்பிற்குரிய தமிழ் வழியிலான தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் பாடநூல்கள், ஆங்கிலம் வழியிலான கணிதம், சுற்றுச் சூழல் கல்வி பாடநூல்கள்.
6-ம் வகுப்பிற்குரிய தமிழ் வழியிலான, தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடநூல்கள், ஆங்கிலம் வழியிலான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடநூல்கள் ஆகும்.
இந்த பாடபுத்தகங்களை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.
தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், அரபி ஆகிய சிறுபான்மை மொழிகளுக்குரிய பாடநூல்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications