நெய்யாறு விவாகரம் - மத்திய மாநில அரசுகள் உடனடி நவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ !
நாகர்கோவில்: காமராஜர் ஆட்சிக் காலத்தில் கோடிக்கணக்கான பணம் செலவு செய்து நெய்யாறு இடதுகரை கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒப்பந்தப்படி தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த கேரள அரசு மறுப்பதால் இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நெய்யாறு இடதுகரை சானலில் ஒப்பந்தப்படி கேரள அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட 21 கிராமங்களில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.
அப்போது அவர் ஆலம்பாறையில் பேசியதாவது
தற்போது நடத்தப்படும் இந்த பிரசாரமும், போராட்டமும் கேரள மக்களுக்கு எதிரானது அல்ல. தமிழக மக்களின் உரிமைக்கான போராட்டம்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கோடிக்கணக்கான பணம் செலவு செய்து நெய்யாறு இடதுகரை கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த கால்வாயில் ஒப்பந்தப்படி தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த கேரள அரசு, தற்போது தண்ணீர் விட மறுக்கின்றது. இதனால், குமரி மாவட்ட விவசாய நிலங்கள் வறண்டு போய்விட்டது. விவசாயிகள் கண்கள் குளமாகி விட்டது.
கடந்த 2005 ம் ஆண்டு கேரள முதல்வரை சந்தித்து தண்ணீர் விடும்படி கோரினோம். எந்த பலனும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications