கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியர் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியைகளை சிலர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ஏற்படுத்தியது. இந்த நிலையில், கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். அந்த பகுதியில் உள்ள பகுதியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். செருபுழா பகுதியில் அவர் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
நேற்று காலை அங்குள்ள வீட்டில் கணக்கெடுக்க சென்றார். அப்போது அந்த வீட்டில் 40 வயதான பெண் தனியாக இருந்தார். அங்கு சென்ற மனோஜ்குமார் தனியாக இருந்த அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கத்தி கூச்சல் போட்டதும் அங்கிருந்து மனோஜ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த மனோஜ்குமார் பணியாற்றும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மனோஜ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.