அதி வேகமாக வந்த காரால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்குள் படு வேகமாக வந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டி.ஆர்.ஓ. விஸ்வநாதனும், அவரது மகள் பாஸ்கின் விஜய் ஆனந்தும் காரில் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
விஸ்வநாதன் தனது மகளை வழியனுப்புவதற்காக வந்ததாக தெரிகிறது. இவர்களது கார் முன்னால் சென்ற காரை ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளது. அப்போது காரின் சக்கரம், அருகில் இருந்த கம்பி ஒன்றில் சிக்கியது.
இதனால் கார் அதிரடியாக பறந்து விமானநிலைய புல்வெளிக்குள் புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையப் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications