மீண்டும் எரிமலை வெடிப்பு-1,000 விமானங்கள் ரத்து
Subscribe to Oneindia Tamil

ஐஸ்லாந்தின் அய் யா பியா லா யெர் குல் (ay-yah-FYAH-lah-yer-kuhl) எரிமலை கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது வெடித்து வானில் சாம்பல் புகை மண்டலத்தை பரப்பி வருகிறது.
இந்த புகை மண்டலத்தால் என்ஜின்கள் இயக்கமே நி்ன்று விமானங்கள் விபத்துக்குள்ளாகலாம் என்பதால் புகை மண்டலம் கரையும் வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இப்போது இந்த எரிமலை வெடித்து ஐஸ்லாந்திலிருந்து ஐரோப்பா வரை பல்லாயிரம் கி.மீட்டருக்கு வான்வெளியில் சாம்பல் நிறைந்திருப்பதால் விமானங்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்று மட்டும் 1,000 விமானங்கள் ரத்தாகியுள்ளன.
இந்த புகை மண்டலத்தால் நெதர்லாந்து, இங்கிலாந்தி்ன் தென் கிழக்கில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications