தங்கம் விலை பெரும் உயர்வு-அட்சய திரிதியை விற்பனை சரிவு

தங்கத்தின் விலை கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 1,700 வரை உயர்ந்துவிட்டது.
உலகில் தங்கம் விற்பனையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில் அட்சய திரிதியையை முன்னிட்டு நகைகள் விற்பனை படு அமோகமாக இருக்கும்.
வருடத்தில் மிக அதிகமாக நகைகள் விற்பனையாகும் நாட்களில் ஒன்று இந்த அட்சய திரிதியை.
ஆனால், கடந்த ஆண்டு இதே தினத்தில் ரூ. 16,000 ஆக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ. 18,450 ஆகிவிட்டது. அதிலும் கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டது.
கிட்டத்தட்ட 13 சதவீதம் விலை உயர்ந்துவிட்டதால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திரிதியையன்று நகைகள் விற்பனையில் 10 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 192 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications