ஜூன் 8ம் தேதி ராஜபக்சே டெல்லி வருகிறார்
Subscribe to Oneindia Tamil

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஜி15 மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அந்த குழுவில் இடம் பெற்றுள்ள நாடுளின் வெளியுறவு அமைச்சர்கள், தலைவர்கள் டெஹ்ரான் வந்து கொண்டுள்ளனர்.
நேற்று இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்களான எஸ்.எம்.கிருஷ்ணாவும், ஜி.எல். பெரீஸும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது ராஜபக்சேவின் இந்தியப் பயணம் குறித்து முடிவானது.
அரை மணி நேரம் இரு தலைவர்களும் பேசிக் கொண்டனர். அப்போது இலங்கையின் மறு சீரமைப்புப் பணிகள் குறித்து பேசினார்களாம்.
சந்திப்புக்குப் பின்னர் எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜூன் 8ம் தேதி ராஜபக்சே இந்தியா வருவார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications