ஐசிஐசிஐ வங்கியுடன் பேங்க் ஆஃப் ராஜஸ்தான் இணைப்பு!
மும்பை: பேங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கி, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்படவுள்ளது.
ராஜஸ்தான் வங்கியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தயாள் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த இணைப்புக்கு இரு வங்கிகளின் இயக்குனர்கள் குழுக்களும் அனுமதி அளித்துவிட்டன.
ஏற்கனவே தமிழ்நாட்டின் பேங்க் ஆஃப் மதுரை, மகாராஷ்டிராவி்ன் சங்லி வங்கி ஆகியவற்றை ஐசிஐசிஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பேங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கிக்கு நாடு முழுவதும் 500 கிளைகள் உள்ளன. ஒரு கிளைக்கு ரூ. 6.5 கோடி என்ற விகிதத்தில் இந்த வங்கியை ஐசிஐசிஐ வாங்கவுள்ளது.
பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் தற்போதைய பங்கு மதிப்பை விட அதிகமாகத் தர ஐசிஐசிஐ வங்கி முன்வந்ததைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் 1.45 சதவீதம் சரிந்தது.
அதே நேரத்தில் பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் பங்கு விலை 19.95 சதவீதம் அதிகரித்துள்ளது.
பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் பங்குகளை 10 ஆண்டுகளுக்கு முன் தயாள் குடும்பத்தினர் வாங்கினர். மிகவும் பழமை வாய்ந்த இந்த வங்கியை பெரிய வங்கியுடன் இணைக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு பரிவர்த்தனை மையம் (செபி) ஆகியவை தயாளுக்கு நெருக்கடி அளித்து வந்தன.
மேலும் கடந்த மார்ச் மாதத்தில் பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் பங்கு பரிவர்த்தனைக்கு செபி தடை விதித்தது. மேலும் ரிசர்வ் வங்கி ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்தது.
அத்துடன் ரிசர்வ் வங்கியே இந்த வங்கிக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியையும் (சிஇஓ) நியமித்தது. மேலும் வங்கியின் இயக்குநர் குழுவில் 5 ரிசர்வ் வங்கி இயக்குனர்களும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டனர்.
இதுபோன்ற நெருக்குதல்களை சமாளிக்க முடியாமல் வங்கியை விற்கும் முடிவுக்கு வந்துள்ளது தயாள் குடும்பம்.
இந்த வங்கியை வாங்க ஸ்டேட் வங்கியும் போட்டியிட்டது. ஆனால், ஐசிஐசிஐ வங்கி அளித்த தொகை அதிகமாக இருந்ததால் அதை தயாள் ஏற்றுக் கொண்டு அவர்களிடம் விற்க முன்வந்துவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications